ETV Bharat / bharat

கர்ப்பிணி மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை!

author img

By

Published : Nov 18, 2022, 6:01 PM IST

புனேவில் தன் கர்ப்பிணி மனைவி தன்னால் விபத்தில் உயிரிழந்த சோகத்தில் கணவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்த சம்பவம் நடந்தேறியுள்ளது.

தன் கர்ப்பிணி மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை..!
தன் கர்ப்பிணி மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை..!

புனே(மகாராஷ்டிரா): கடந்த வாரம் தனது கர்ப்பிணி மனைவியை கணவர் ஒருவர் தினசரி பரிசோதனைக்காக அழைத்து வந்தார். இந்நிலையில், வண்டியில் வந்துகொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்த அந்த கர்ப்பிணியை அந்த வழியே வந்த டிராக்டர் ஒன்று அடித்துச்சென்றது. இதனால் படுகாயம் அடைந்த கர்ப்பிணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், தன் மனைவியின் இறப்பை நேரில் கண்ட கணவர் அது தந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்துள்ளார். இதனால் ஒருகட்டத்தில் மன உளைச்சலின் உச்சத்திற்குச்சென்ற கணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் ஜுன்னர் தாலுகாவிலுள்ள டொண்டுகர்வாடியில் நடந்தேறியது.

தற்கொலை செய்துகொண்ட ரமேஷ்(29) என்ற இந்த இளைஞர் வித்யா என்பவரை, எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், நான்கு மாத கர்ப்பிணியான வித்யாவை கடந்த நவ.14ஆம் தேதி தினசரி மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச்சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் தன் மனைவி வித்யா, அவரது மாமியார் என மூன்று பேர் சேர்ந்துபோகும் போது, குறுக்கே வந்த வேகத்தடையைத் தாண்டுகையில் வித்யா கீழே விழுந்துள்ளார்.

அப்போது அந்த வழியே வந்த டிராக்டர் வித்யா மீது ஏறிச்சென்றதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மிகுந்த குற்ற உணர்ச்சிக்கும், மனவேதனைக்கும் உள்ளாகி வந்த ரமேஷ், கடந்த நவ.16அன்று விஷம் அருந்தி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தன் கர்ப்பிணி மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை..!
கர்ப்பிணி மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை!

இதையும் படிங்க: படித்த பெண்கள் லிவிங் டுகெதரில் இருக்கக்கூடாது - மத்திய இணை அமைச்சர் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.