தமிழ்நாடு

tamil nadu

வரதட்சணை கொடுமை: மருமகள் மீது தாக்குதல்...மாமியார், நாத்தனார் கைது

By

Published : Sep 22, 2022, 7:02 AM IST

வரதட்சணை கொடுமை: சூடான பாத்திரத்தால் தலையில் அடித்த மாமியார் நாத்தனார் கைது
வரதட்சணை கொடுமை: சூடான பாத்திரத்தால் தலையில் அடித்த மாமியார் நாத்தனார் கைது ()

உத்தரகாண்டில் வரதட்சணை கேட்டு மருமகளை சூடான பாத்திரத்தால் தாக்கிய மாமியார் மற்றும் நாத்தனாரை போலீசார் கைது செய்தனர்.

உத்தரகாண்ட்மாநிலம் தெஹ்ரி மாவட்டத்தில் வசித்து வருபவர், ப்ரீத்தி (32). இவரது கணவர் அனூப் மனநிலை சரியில்லாத நிலையில் உள்ளார். இந்நிலையில் வரதட்சணை கேட்டு ப்ரீத்தியின் மாமியார் சுபத்ரா மற்றும் ப்ரீத்தியின் நாத்தனார் ஜெயா ஆகியோர் ப்ரீத்தியை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் வரதட்சணை அதிகமாக கேட்டு ப்ரீத்தியின் தலையில் சூடான பாத்திரத்தால் தாக்கியுள்ளனர். இந்நிலையில் ப்ரீத்தியின் தாய் சரஸ்வதி தேவி, தனது மகளை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது முதலில் ப்ரீத்தியின் மாமியார் ப்ரீத்தியின் தாயை உள்ளே விட மறுத்துள்ளார்.

பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு உள்ளே சென்ற சரஸ்வதி தேவி, தனது மகளின் நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். சுபத்ரா மற்றும் ஜெயா மீது சரஸ்வதி தேவி நியூ தெஹ்ரி கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மகளிர் விடுதியில் மாணவிகளுக்குப்பாலியல் தொல்லை - 5 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details