தமிழ்நாடு

tamil nadu

வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக 3 சீன நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

By

Published : Aug 2, 2022, 9:41 PM IST

Sitharaman
Sitharaman

வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக மூன்று சீன செல்போன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பதிலளித்து உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "ஒப்போ, விவோ, ஜியோமி ஆகிய செல்போன் நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மூன்று நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஒப்போ நிறுவனம் 450 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளது. ஜியோமி நிறுவனம் 46 லட்சம் மட்டுமே டெபாசிட் செய்துள்ளது. விவோ இந்தியா நிறுவனம் சுமார் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ள நிலையில், 62 கோடி ரூபாயை செலுத்தியுள்ளது.

விவோவால் நிறுவப்பட்ட 18 நிறுவனங்கள் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில், அவற்றை அமலாக்கத்துறை கண்காணித்து வருகிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:சந்தேகத்திற்குரிய ஆன்லைன் கடன் செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை - நிர்மலா சீதாராமன்

ABOUT THE AUTHOR

...view details