தமிழ்நாடு

tamil nadu

உறுதி.. நிபா வைரஸின் ஆதாரம் வௌவால்கள்.. கேரள சுகாதார அமைச்சர்!

By

Published : Sep 29, 2021, 7:14 PM IST

நிபா வைரஸின் ஆதாரமாக வௌவால்கள் விளங்கலாம் என கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

Veena George
Veena George

திருவனந்தபுரம் : கேரளத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவன் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு உயிரிழந்தார்.

இந்நிலையில் வௌவால்களை நிபா வைரஸின் ஆதாரமாக கருதலாம் என மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் நடத்திய சோதனைகள், சிறுவனின் வீட்டு வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு வகை வெளவால்களுடன் வைரஸின் தொடர்பைக் தெளிவுப்படுத்தியுள்ளன.

இது தவிர மீதமுள்ள மாதிரிகள் விரிவாக பரிசோதிக்கப்படுகின்றன” என்றார். தொடர்ந்து, கடந்த 3 வாரங்களாக மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதை வீணா நிம்மதி பெருமூச்சுடன் கூறினார்.

இது குறித்து அவர் கூறுகையில், “மாநிலத்தில் கடந்த 21 நாள்களில் நிபா பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை. நோய் தடுப்பு நடவடிக்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

கோழிக்கோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கொடிய வைரஸ் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுவனின் வீட்டைச் சுற்றி சுமார் மூன்று கிலோமீட்டர் பாதுகாப்பு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன” என்றார்.

கேரளத்தில் கடந்த 2018இல் நிபா வைரஸ் பரவியதில் 21 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : குன்னூரில் தஞ்சமடைந்த வௌவால்கள்- நிபா அச்சத்தில் மக்கள்

ABOUT THE AUTHOR

...view details