குன்னூரில் தஞ்சமடைந்த வௌவால்கள்- நிபா அச்சத்தில் மக்கள்

author img

By

Published : Sep 18, 2021, 7:54 PM IST

more-bats-came-to-coonoor-area-first-time

முதல்முறையாக வௌவால்கள் அதிகளவில் குன்னூர் பகுதிக்கு இடம்பெயர்ந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நிபா வைரஸ் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வகையான அரிய வகை விலங்குகள், பறவைகள், தாவரங்கள் உள்ளன. இந்நிலையில், முதல்முறையாக வௌவால்கள் அதிகளவில் குன்னூர் பகுதிக்கு இடம்பெயர்ந்த நிகழ்வு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குன்னர் அருகேயுள்ள வெலிங்டன் பகுதியில் உள்ள மரங்களில் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வௌவால்கள் தஞ்சமடைந்துள்ளன. இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் நந்தக்குமார் கூறுகையில், "கேரள மாநிலத்தில் இந்தாண்டு வரலாறு காணாத அளவில் மழை பெய்து பேரிடர் ஏற்பட்டதால், அங்கிருந்து வௌவால்கள் இடம்பெயர்ந்து மலை பிரதேசமான குன்னூருக்கு வந்துள்ளது.

குன்னூர் பகுதியில் அதிகமான வௌவால்கள் தஞ்சம்

வௌவால்கள் அதிகப்படியாக தஞ்சமடைந்திருப்பது அப்பகுதி மக்களிடைய நிபா வைரஸ் பரவும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: கூடலூரில் புலி தாக்கி வளர்ப்பு மாடு உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.