தமிழ்நாடு

tamil nadu

மைசூரு கூட்டுப் பாலியல் வழக்கு: தமிழ்நாட்டைச் சேர்ந்த 6ஆவது குற்றவாளி கைது

By

Published : Aug 31, 2021, 10:25 PM IST

Arrest

கர்நாடக மாநிலம், மைசூர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டுவந்த இருவரில் ஒருவர் நேற்று(ஆக.30) நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு:கர்நாடக மாநிலம், மைசூருவில் உள்ள சாமுண்டி மலை அடிவாரத்திற்கு கடந்த 24ஆம் தேதி கல்லூரி மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் சென்றார்.

அப்போது, அங்கு வந்த ஒரு கும்பல் மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது. இந்தச் சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வழக்கில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முதலில் பணம் கேட்டு மிரட்டியதாகவும், இல்லை என்றவுடன் பாலியல் வன்புணர்வு செய்ததும், இந்தச் சம்பவத்தில் மேலும் இருவருக்குத் தொடர்பிருப்பதும் தெரியவந்தது.

அவர்களை தனிப்படை காவலர்கள் தீவிரமாகத் தேடிவந்தனர். இதனிடையே கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் 10 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மேலும் ஒரு குற்றவாளியை காவலர்கள் நேற்று கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கொள்ளை, பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளன. மேலும், மீதமுள்ள ஏழாவது குற்றவாளி தீவிரமாக தேடப்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க:கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு ஆளான மைசூர் மாணவி

ABOUT THE AUTHOR

...view details