தமிழ்நாடு

tamil nadu

அயோத்தியில், ஒற்றுமை சிலையை விட உயரமாக அமையவுள்ள ராமர் சிலை

By

Published : Sep 20, 2022, 12:53 PM IST

அய்யோத்தியில், ஒற்றுமை சிலையை விட உயரமாக அமையவுள்ள ராமர் சிலை

அயோத்தியில் அமையவுள்ள ராமர் சிலை குஜராத்தில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை விட 69 மீட்டர் உயரமாக அமையவுள்ளது.

குஜராத்தில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேலின், ஒற்றுமை சிலையை கட்டிய பிரபல சிற்பியும் பத்ம பூஷன் விருது பெற்றவருமான ராம் வி சுதார், தற்போது உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் சிலையை கட்டவுள்ளார். இச்சிலை சர்தார் வல்லபாய் படேலின் சிலையை விட பெரியதாக அமையவுள்ளது.

சிற்பி ராம் வி சுதார் மற்றும் அவரது மகனான அனில் சுதார் இருவரும் இணைந்து இந்த சிலையினை கட்ட உள்ளனர்.

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் சிலை குறித்து சுதார் கூறுகையில், “அயோத்தியில் கட்டப்படும் ராமர் சிலை 251 மீட்டர் உயரம் இருக்கும். இது 182 மீட்டர் உயரம் உள்ள வல்லபாய் படேலின் சிலையை விட 69 மீட்டர் உயரத்தில் அமையவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த சிலை குறித்து ராம் வி சுதாரின் மகன் அனில் சுதார் கூறுகையில், "சாஹிபாபாத்தில் உள்ள தனது பட்டறையில் ராமர் சிலை தயாரிக்கப்படும். ராமர் சிலையை உருவாக்க சுமார் 2,000 கைவினை கலைஞர்கள் தேவைப்படுவார்கள். குஜராத்தில் கட்டப்பட்ட சர்தார் படேலின் சிலை மூன்றரை ஆண்டுகளில் 1,000 கைவினை கலைஞர்களால் செய்யப்பட்டது.

முன்னதாகவே இந்த சிலையின் மாதிரியை பார்த்து சிலை கட்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்துள்ளார். தற்போது சிலை அமைக்க நிலம் கண்டறியும் பணி நடந்து வருகிறது. நிலம் கிடைத்த பின், நான்கு ஆண்டுகளில் சிலை அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:யோகி ஆதித்யநாத்துக்கு கட்டப்பட்ட கோயில்: இது உ.பி. சம்பவம்

ABOUT THE AUTHOR

...view details