தமிழ்நாடு

tamil nadu

Coronavirus India update: இந்தியாவில் ஒரே நாளில் 8,439 பேருக்கு பாதிப்பு

By

Published : Dec 8, 2021, 4:29 PM IST

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 8,439 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 439 பேர் உயிரிழந்துள்ளனர்.

India
India

கோவிட்-19 தினசரி நிலவரம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் (டிச.7) எட்டாயிரத்து 439 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பாதிப்பு, உயிரிழப்பு நிலவரம்

இதனால், மொத்த பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை மூன்று கோடியே 46 லட்சத்து 48 ஆயிரத்து 383ஆக அதிகரித்துள்ளது. நேற்று (டிச.6) மட்டும் தொற்றால் 195 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்து 73 ஆயிரத்து 952 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 40 லட்சத்து 89 ஆயிரத்து 137 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 93 ஆயிரத்து 733ஆக உள்ளது.

தடுப்பூசி திட்ட நிலவரம்

இதுவரை, மொத்தம் 130 கோடியே 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 80 கோடியே 83 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 49 கோடிக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 73 லட்சத்ததுக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:2000 ரூபாய் தாள்கள் புழக்கம் குறைந்தது ஏன்?

ABOUT THE AUTHOR

...view details