தமிழ்நாடு

tamil nadu

கோவிட் 19: இந்தியாவில் மேலும் 30 ஆயிரத்தை கடந்த பாதிப்பு

By

Published : Sep 24, 2021, 3:02 PM IST

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 32 ஆயிரத்து 542 நபர்கள் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா
இந்தியா

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 31 ஆயிரத்து 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாடு முழுவதும் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 35 லட்சத்து 94 ஆயிரத்து 803 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 32 ஆயிரத்து 542 நபர்கள் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 28 லட்சத்து 48 ஆயிரத்து 273ஆக உயர்ந்தது.

318 நபர்கள் தொற்று காரணமாக ஒரேநாளில் உயிரிழந்தனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 46 ஆயிரம் 368 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இதுவரை 84 கோடியே 15 லட்சத்து 18 ஆயிரத்து 26 நபர்களுக்கு தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details