தமிழ்நாடு

tamil nadu

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கபட்ட சிறுமிக்கு நேரில் சென்று ஆறுதல் - 1 லட்சம் நிதியுதவி அளித்த திமுக எம்பி

By

Published : May 14, 2022, 9:24 AM IST

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கபட்ட சிறுமிக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி 1 லட்சம் நிதியுதவி அளித்த திமுக எம்பி
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கபட்ட சிறுமிக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி 1 லட்சம் நிதியுதவி அளித்த திமுக எம்பி ()

இந்தூரில் மகேஸ்வர் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கபட்ட 11 வயது சிறுமியை தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து 1 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

போபால்: இந்தூரில் மகேஸ்வர் பகுதியில் 11 வயது சிறுமி 35 வயது நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார், அந்த சிறுமி தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், அந்த சிறுமி தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் குடும்பம் சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வந்த நிலையில், தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார் நேரில் சென்று,பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார்.

சிறந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் எனவும், குடும்பத்தை பராமரிக்கும் பொறுப்பையும் மேற்கொள்வேன், எனவும் சிறுமியின் குடும்பத்தை மீட்டெடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றும் அவர் கூறினார்.

மேலும் சிகிச்சை அளிப்பதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றாலும் அல்லது சிகிச்சைக்காக தமிழகம் வர வேண்டுமென்றாலும் என்னால் முடிந்த உதவியை செய்வேன் எனவும் செந்தில்குமார் எம்பி தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details