நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் மோதல் குறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ட்விட்டரில் கவலை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், "நாட்டின் நாடளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அரசு-எதிர்க்கட்சியினருக்கு இடையே அரங்கேறிய மோதல் மிகவும் வருந்தத்தக்கது.
எனது நீண்ட நாடாளுமன்ற வாழ்வில் நீண்ட மோதல், போராட்டங்கள் பலவற்றை கண்டுள்ளேன். ஆனால் இதுபோன்ற காட்சிகளை நான் இதுவரை கண்டதில்லை" எனக் கவலையுடன் தெரிவித்துள்ளார்.