ஹைதராபாத் : நாடு முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 44 ஆயிரத்து 230 பேர் புதிதாக கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஒன்றிய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 44 ஆயிரத்து 230 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. உயிரிழப்பு 555 ஆக பதிவாகியுள்ளது. ஆக, மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 5 ஆயிரத்து 155 ஆக உள்ளது.
3 கோடியே 7 லட்சத்து 43 ஆயிரத்து 972 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர். இதுவரை 45 கோடியே 60 லட்சத்து 33 ஆயிரத்து 723 பேருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.