தமிழ்நாடு

tamil nadu

கோவிட்-19 - இந்தியாவில் புதிதாக 28,326 பேருக்கு பாதிப்பு

By

Published : Sep 26, 2021, 11:33 AM IST

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 28 ஆயிரத்து 326 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

COVID-19
COVID-19

இதன்மூலம் நாடு முழுவதும் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 36 லட்சத்து 52 ஆயிரத்து 745ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 26 ஆயிரத்து 032 நபர்கள் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.

நாடு முழுவதும் தொற்றிலிருந்து குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 29 லட்சத்து இரண்டாயிரத்து 351ஆக உயர்ந்தது. 260 நபர்கள் தொற்று காரணமாக ஒரேநாளில் உயிரிழந்தனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 46 ஆயிரம் 918 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இதுவரை 85 கோடியே 60 லட்சத்து 81 ஆயிரத்து 527 நபர்களுக்கு தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:சுகாதாரத் துறையை மேம்படுத்த போர்க்கால நடவடிக்கை தேவை - வெங்கையா நாயுடு

ABOUT THE AUTHOR

...view details