தமிழ்நாடு

tamil nadu

புதுச்சேரியில் சிறு துறைமுகம் அமைக்க முதலமைச்சர் ஆய்வு

By

Published : Oct 14, 2021, 7:27 AM IST

பனிதிட்டு பகுதி
புதுச்சேரி முதலமைச்சர் ()

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஆகியோர் பனிதிட்டுப் பகுதியில் சிறு துறைமுகம் அமைப்பதற்கான முதற்கட்ட ஆய்வை மேற்கொண்டனர்.

புதுச்சேரி:புதுச்சேரியில் மூர்த்திக்குப்பம், புதுகுப்பம், நரம்பை, பனித்திட்டு, நல்லவாடு ஆகிய மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மலட்டாறு முகத்துவாரத்தில் சிறிய துறைமுகம் ஒன்று கட்டித் தர வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கைவைத்திருந்தனர்.

அதன் அடிப்படையில் ரங்கசாமி நேற்று நல்லவாடு, பனித்திட்டு மீனவ கிராமங்களில் மலட்டாறு முகத்துவாரத்தில் சிறு துறைமுகம் அமைப்பதற்கான முதற்கட்ட ஆய்வை மேற்கொண்டார்.

அப்போது சபாநாயகர் செல்வம், பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமிகாந்தன், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை இயக்குநர் முத்து மீனா, அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: "குடிசை பகுதி மக்களை மறுகுடியமர்வு" வரைவு அறிக்கையை தமிழில் வெளியிடுக!

ABOUT THE AUTHOR

...view details