தமிழ்நாடு

tamil nadu

உடலுறவு மூலம் குரங்கம்மை பரவல்… அதிர்ச்சி தகவலும்... மருத்துவ நிபுணர்களின் விளக்கமும்...

By

Published : Jul 26, 2022, 7:28 PM IST

உலகளாவிய சுகாதார அவசரநிலையாக குரங்கம்மை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொற்று 90 விழுக்காடு உடலுறவு மூலம் பரவக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் அளித்துள்ள முழு விளக்கம் பின்வருமாறு.

can-monkeypox-spread-through-sex-here-is-what-experts-explain
can-monkeypox-spread-through-sex-here-is-what-experts-explain

ஹைதராபாத்:குரங்கம்மையை உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. மொத்தமாக 75 நாடுகளில் 16,000-க்கும் மேற்பட்ட குரங்கம்மை பாதிப்புகள் பதிவாகி உள்ளன. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் அதிகம் பதிவாகிவருகிறது. இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு முதலாவதாக ஜூலை 14ஆம் தேதி கேரளாவில் பதிவானது. இதையடுத்து, கேரளாவில் மேலும் 2 பேருக்கும், டெல்லியில் ஒருவருக்கும் குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

குரங்கம்மை தொற்று விளக்கம்:குரங்கம்மை ஒரு வைரஸ் தொற்றாகும். இதனால் லேசான பாதிப்புகள் மட்டுமே ஏற்படும் என்றாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. பெரியம்மையை போலவே இந்த தொற்று 14 முதல் 21 நாள்களில் தானகவே குணமாகிவிடும். ஆரம்பக் கட்டத்தில் காய்ச்சல், தலைவலி, உடல் வலி அறிகுறிகள் தென்படும். பின்னர் தீவிர காய்ச்சலாக உருமாறி உடல் முழுவதும் தடிப்புகள், கொப்புளங்கள் ஏற்படும். இதற்கு அடுத்த கட்டம் மிகவும் ஆபத்தானது. உயிரிழப்பு கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

குரங்கம்மை எப்படி பரவுகிறது:குரங்கம்மை ஒருவரிடமிருந்து மற்றொருக்கு எளிதாக பரவாது. ஆனால், குரங்கம்மை பாதிக்கப்படோருடன் நெருங்கிய தொடர்பில் இருப்போருக்கு எளிதாக பரவிடும். அதாவது தோலில் ஏற்பட்ட கொப்புளங்கள், மூச்சுக் குழாய், வாய், மூக்கு, கண்கள், பிறப்புறுப்பு உள்ளிட்டவைகள் துளைகள் மூலம் குரங்கம்மை தொற்று பரவுகிறது. குறிப்பாக பாலியல் ரீதியாக தொடர்பின்போது எளிதாக பரவும் தன்மை கொண்டுள்ளது.

இதுகுறித்து சர் கங்கா ராம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை நிபுணரும் மூத்த மருத்துவ ஆலோசகருமான டாக்டர் டிரேன் குப்தா கூறுகையில், "பாலியல் தொடர்புகளின் போது குரங்கம்மை தொற்று மிக எளிதாக பரவிவிடும். குறிப்பாக உடலுறவின்போது ஒருவருக்கொருவர் வாய்வழி, உடல்வழி தொடுதல் மற்றும் பிறப்புறுப்பு, விந்தணுக்கள், லேபியா, ஆசனவாய் தொடுதல் மூலம் குரங்கம்மை பரவும். அதேபோல உடலுறவு அல்லாமல் கட்டிப்பிடித்தல், மசாஜ் செய்தல், முத்தமிடுதல் போன்ற தொடர்பும் தொற்றுக்கு வழிவகுக்கும். அதோடு தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் பயன்படுத்திய பெட்ஷீட், துண்டு, தலையணை, ஆடைகள் உள்ளிட்டவை மூலமும் தொற்று பரவ வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்தார்.

ஆணுறை பயன்படுத்துவது தொற்றை தடுக்குமா...?இதுகுறித்து ஃபோர்டிஸ் மருத்துவமனையின் இயக்குநரும் மூத்த மருத்துவ ஆலோசகருமான டாக்டர் மனோஜ் சர்மா கூறுகையில், "இந்த தொற்று கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல், பாதிக்கப்பட்டோரின் உடைகள், பொருள்களை பயன்படுத்துதல் மூலமே பரவும் என்பதால், ஆணுறை பயன்படுத்துவது முற்றிலும் பயனற்றது. ஆகவே, பாதிக்கப்பட்ட ஒருவரை தனிமைப்படுத்தல் மிக முக்கியமானதாகும்.

கரோனா தொற்றுக்கு பிறகு மீண்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது. கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் போலவே முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்டவயை மக்கள் பின்பற்ற வேண்டும். லேசான காய்ச்சல், திடீர் உடல் வலி, தலைவலி ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக உடல்நிலை சரியில்லாத நேரத்தில் உடலுறவில் ஈடுபடக்கூடாது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:டெல்லியில் குரங்கம்மை: பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்வு

ABOUT THE AUTHOR

...view details