தமிழ்நாடு

tamil nadu

தோல் கழலை நோயை கட்டுப்படுத்தவில்லை என ராஜஸ்தான் அரசை கண்டித்து பாஜகவினர் போராட்டம்!

By

Published : Sep 20, 2022, 7:56 PM IST

ராஜஸ்தான் அரசை கண்டித்து பாஜகவினர் போராட்டம்
ராஜஸ்தான் அரசை கண்டித்து பாஜகவினர் போராட்டம் ()

ராஜஸ்தானில் கால்நடைகளின் உயிர்களை பறிக்கும் தோல் கழலை நோயை கட்டுப்படுத்தாத மாநில அரசை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்து வருகின்றன. இந்த நோயை கட்டுப்படுத்த ராஜஸ்தான் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அம்மாநில பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், ராஜஸ்தான் அரசை கண்டித்து ஜெய்ப்பூரில் இன்று(செப்.20) பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கணக்கான பாஜகவினர் கலந்து கொண்டு, தோல் கழலை நோயை கட்டுப்படுத்தாத மாநில அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்தின்போது, மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா தடுப்புகள் மீது ஏறினார். அவரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். முன்னதாக நேற்று(செப்.19) அம்மாநில அரசை கண்டித்து, பாஜக எம்எல்ஏ சுரேஷ் ராவத் பசுவுடன் சட்டப்பேரவைக்கு வந்தார்.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கால்நடைகளை கொல்லும் இந்த நோயை கட்டுப்படுத்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். அப்போது, அவர் அழைத்து வந்த பசு தலைதெரிக்க ஓடியது. அரசின் செயல் கோமாதாவுக்கு கூட பிடிக்கவில்லை என சுரேஷ் ராவத் கிண்டலாக கூறினார்.

இந்த பிரச்சினையை அரசு கவனத்தில் கொண்டுள்ளதாகவும், கால்நடைகளை பாதுகாப்பதுதான் தங்களது முன்னுரிமை என்ற போதும், அதற்கான தடுப்பூசிகளை மத்திய அரசுதான் வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் 14 கால்நடைகளுக்குத் தோல் கழலை நோய்!

ABOUT THE AUTHOR

...view details