தமிழ்நாடு

tamil nadu

லாக்டவுன் கடைபிடிக்காத மக்கள் மீது வங்க காவல்துறை தடியடி

By

Published : Apr 22, 2020, 6:06 PM IST

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ரேஷன் பொருட்கள் கேட்டு லாக்டவுனை மீறி வெளியே வந்த பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியாதால் பரபரப்பு ஏற்பட்டது.

Police Starts Lathi Charge
Police Starts Lathi Charge

மேற்கு வங்க மாநிலம் பதுரியாவில் இன்று உள்ளூர் வாசிகளுக்கு காவல்துறையினருக்கும் இடையே நடைபெற்ற மோதல் ஏற்பட்டு பொதுமக்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் கூட்டமாக வெளியே வருவது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் தங்களுக்கு முறையாகச் சேரவில்லை என சாலையில் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இதையடுத்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் காவல்துறையினர் சிலர் தாக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கும்பலைக் கலைக்க மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

காவல்துறை தடியடி

மேற்கு வங்கத்தில் இதுவரை கரோனா வைரஸ் காரணமாக 423 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 15 பேர் உயிரிழந்துள்ளனர். 73 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.

இதையும் படிங்க:மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை!

ABOUT THE AUTHOR

...view details