தமிழ்நாடு

tamil nadu

தடை செய்யப்பட்ட சீன செயலிகள்... மத்திய அரசு கடும் எச்சரிக்கை!

By

Published : Jul 23, 2020, 9:39 AM IST

டெல்லி: இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள சீனாவின் 59 செயலி நிறுவனங்களுக்கும், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் சார்பில் எச்சரிக்கை மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

tik
tik

இந்தியா - சீனா எல்லை மோதல் இரு நாடுகளிலும் அசாதாரணமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. சீனாவிற்கு எதிராக பல போராட்டங்களும், சீன பொருள்களை உடைத்தும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, முதற்கட்டமாக நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என்ற காரணத்திற்காக டிக்டாக், ஷேர்இட் உள்பட் சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இந்த அதிரடி முடிவு இந்திய மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பல முன்னணி நாடுகளின் அலுவலர்களும் இந்த முடிவை வரவேற்பதாக கருத்து தெரிவித்தனர். இச்செயலிகளுக்கு அதிகாரப்பூர்வமாக தடை விதித்தாலும், செயல்பாட்டில் இருப்பதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. டிக்டாக் செயலியை துருக்கி மொழிக்கு மாற்றி மக்கள் உபயோகிக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

இந்நிலையில், தடை செய்யப்பட்டுள்ள செயலிகளின் நிறுவனத்திற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் சார்பில் கடுமையான எச்சரிக்கை மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதில், "தடை செய்யப்பட்ட செயலிகள் முறைகேடான முறையில் இந்தியாவில் உபயோகிப்பது இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய செயல் ஆகும். இச்செயலிகள் வேறு எதேனும் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வந்தால் அரசாங்கத்தின் மீறியதாக கருதப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்துள்ளனர்.

இதே போல், நாட்டின் பாதுக்காப்பிற்காக ராணுவ வீரர்களும், முன்னாள் ராணுவ வீரர்களும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 89 சீன செயலிகளை உபயோகிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details