தமிழ்நாடு போன்றே புதுச்சேரியிலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, "புதுச்சேரியில் கரோனா பரிசோதனை 500இல் இருந்து ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் அரசு சொல்லும் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல், கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்வு, துக்க நிகழ்ச்சிகளில் அதிகளவில் பங்கேற்கின்றனர். இதனால், கரோனா பாதிப்பு அதிகரிக்கிறது.