உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் யூனியன் பிரதேசங்களில் தீவிரமடைந்து வருகிறது. யூனியன் பிரதேசமான காரைக்காலில் 8 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இன்று (ஜூன் 19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, அவரது 13 வயது மகளுக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, புதுவை மற்றும் தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து, குடும்பத்துடன் சென்னையில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிவொன்றுக்கு சென்று வந்தததை அடுத்து தாய், மகள் இருவருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.