தமிழ்நாடு

tamil nadu

ரயில் முன்பு படுத்து இளைஞர் தற்கொலை - அதிர்ச்சியை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி!

By

Published : Aug 21, 2019, 4:25 PM IST

Updated : Aug 21, 2019, 4:47 PM IST

டெல்லி: மெட்ரோ ரயில் முன்பு இளைஞர் ஒருவர் படுத்து, தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி தாகூர் பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி, இளைஞர் ஒருவர் இரவு 11 மணியளவில், யாரும் இல்லாத அந்த ரயில் நிலைய நடைபாதையில் சாதாரணமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மெட்ரோ ரயில் வருவதைக் கண்ட அவர், திடீரென்று பாதி உடல் தண்டவாளத்தின் அருகே இருக்கும்படி படுத்துக் கொண்டார். அடுத்து சில விநாடிகளில் ரயில் மோதியதில், அந்த இளைஞர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்தவர் பெயர் ராகுல் (27) என்றும், அவர் நஜஃப்கர் (Najafgarh) பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவு செய்திருந்தது. தற்போது இந்த வீடியோ காட்சி அனைவராலும் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

ஆகஸ்ட் 16ஆம் தேதி அதே நாளில் டெல்லி ஆதர்ஷ் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில், 25 வயது திருமணமான பெண் ஒருவர் ரயில் முன்பு குதித்து தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

Delhi train suicide attempt news


Conclusion:
Last Updated :Aug 21, 2019, 4:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details