தமிழ்நாடு

tamil nadu

“அரோகரா..” பழனி முருகன் கோயிலில் ஜப்பானியர்கள் சிறப்பு வழிபாடு! - japan devotees swami darshan

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 20, 2024, 8:02 PM IST

திண்டுக்கல்: அறுபடை வீடுகளுள் மூன்றாம் படை வீடாகத் திகழ்வது, திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில். 

இந்தக் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் தரிசனம் செய்ய தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவர். சாதாரண நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் வருகை தருவது வழக்கம்.

அந்த வகையில், இன்று (ஏப்.20) ஜப்பான் நாட்டின் டோக்கியோ மாகாணத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும், போகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் செய்தும், அங்கு நடைபெற்ற பூஜையிலும் பங்கேற்றனர். 

தமிழ்நாடு வந்துள்ள இவர்கள் நவகிரக ஸ்தலங்கள், அறுபடை வீடுகள், சித்தர்களின் ஜீவசமாதிகளை வழிபட வந்துள்ளதாக தெரிவித்தனர். வெளிநாட்டைச் சேர்ந்த பக்தர்கள் அனைவரும் நெற்றி நிறைய விபூதி, சந்தனம், குங்குமத்துடன் காட்சியளித்ததைப் பலரும் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details