தமிழ்நாடு

tamil nadu

புதுக்கோட்டையில் இளைஞர் வெட்டிக் கொலை... முன்விரோதம் காரணமா? - போலீசார் தீவிர விசாரணை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 9, 2024, 8:17 AM IST

Updated : Feb 9, 2024, 8:54 AM IST

Pudukkottai murder: புதுக்கோட்டையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Youth hacked to death in Pudukkottai
புதுக்கோட்டையில் இளைஞர் வெட்டிக் கொலை

புதுக்கோட்டை:விஸ்வநாத தாஸ் பகுதியைச் சேர்ந்தவர் உச்சி கார்த்தி (25). இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள், புதுக்கோட்டை நகரில் உள்ள காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சீனி என்பவரும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இருவரும் விரோதிகளாக ஆனதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று (பிப்.8) மாலை விஸ்வ நாததாஸ் தெருவில் உள்ள உச்சி கார்த்தி வீட்டில் கட்டுமான வேலைகள் நடைபெற்றதால், அதைப் பார்ப்பதற்காக கார்த்தி வந்துள்ளார். அந்த சமயம் பார்த்து 3 நபர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்து, கார்த்தியை முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் அலறி அடித்துக் கொண்டு வீட்டிலிருந்து கார்த்தி வெளியே ஓடிவந்துள்ளார். இருந்தாலும் கார்த்தியை மூன்று பேரும் விடாமல் துரத்தி வெட்டிக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தம்பி ஓடியுள்ளனர். இதனை அடுத்து அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடம் வந்த திருக்கோகர்ணம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க:செல்போன் திருட்டு போனதால் தகராறு; மது போதையில் நண்பனை அடித்து கொலை செய்த நபர்!

பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்ட பின்னர், கார்த்தியின் உடல் உடற்கூறு ஆய்விற்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த கொலையை முன்விரோதம் காரணமாக சீனி செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு, அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:தங்கையின் காதலை ஏற்க மறுத்த இளைஞரைக் கொன்ற அண்ணன்.. கொடைக்கானலில் நடந்த கொடூரம்!

Last Updated :Feb 9, 2024, 8:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details