தமிழ்நாடு

tamil nadu

தூத்துக்குடியில் தொடங்கிய திமுக தேர்தல் அறிக்கை கருத்துக்கேட்பு கூட்டம்; வெளி துறைமுக திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 5, 2024, 3:27 PM IST

DMK election manifesto: தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர் நல பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துக்களை திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மனுக்களாகப் பெற்றனர்.

thoothukudi VOC port outer harbor project should be implemented immediately for south india to development
தூத்துக்குடியில் தொடங்கிய திமுக தேர்தல் அறிக்கை கருத்துக்கேட்புக் கூட்டம்

தூத்துக்குடியில் தொடங்கிய திமுக தேர்தல் அறிக்கை கருத்துக்கேட்புக் கூட்டம்

தூத்துக்குடி: 2024 நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளைத் தொடங்கி உள்ளன. நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் வகையில், தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக, தொகுதி பங்கீட்டுக் குழு, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு என்று மூன்று குழுக்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அமைத்துள்ளார்.

இக்குழுவில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையிலான தேர்தல் அறிக்கை குழுவில் செய்தி தொடர்பாளர் டி.கே எஸ் இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ் விஜயன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, வர்த்தகர் அணி துணை தலைவர் கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஷ் குமார் எம்.பி, மாணவர் அணி செயலாளர் சி.வி.எம் எழிலரசன், அயலக அணி செயலாளர் எழிலன், நாகநாதன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அனைத்து மாவட்ட மக்களிடம் கருத்து கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கும் இந்த குழுவின் கருத்துக்கேட்பு கூட்டம் இன்று தொடங்கி பிப்.23 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் இன்று (பிப்.5) தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில், தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்றத் தொகுதியின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பல்வேறு தரப்பட்ட தொழில் முனைவோர்கள், வர்த்தகர்கள், வியாபாரிகள், விவசாயிகள், மருத்துவர்கள், மீனவர்கள், மாணவர் சங்கங்கள், தொழிலாளர் நல பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துக்களை நேரடியாக மனுக்களாகப் பெற்றனர்.

தூத்துக்குடியில் உள்ள அகில இந்தியத் தொழில் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் திமுக நாடாளுமன்றத் தேர்தல் தயாரிக்கும் குழுவிற்குக் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இது குறித்து அகில இந்தியத் தொழில் வர்த்தகர்கள் சங்கத் தலைவர் தமிழரசு கூறுகையில், “சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தைத் தடுப்பதற்கு நிரந்தர வடிகால் அமைத்துத் தீர்வு காண வேண்டும். தூத்துக்குடி விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

சிப்காட் தொழிற்பேட்டையில் சிப்காட் மூலமாகவும், மாநகராட்சி மூலமாகவும் இரண்டு விதமான வரிகள் விதிக்கப்படுகிறது. இது போன்ற நிலை தமிழகத்தில் எங்கும் இல்லை. சிப்காட் மூலமாகவே மட்டுமே வரி வசூலிக்க வேண்டும். தென்னிந்தியா வளர்ச்சி பெறத் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் வெளி துறைமுக திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:திமுக கூட்டணியில் யார் எந்த தொகுதி? - கனிமொழி எம்பி அளித்த பதில்!

ABOUT THE AUTHOR

...view details