தமிழ்நாடு

tamil nadu

கோடை வெயில்: கால்நடைகளைப் பாதுகாக்கத் தண்ணீர் தொட்டி அமைத்த ஊராட்சி நிர்வாகம்.. பொது மக்கள் பாராட்டு! - Water tanks to protect cattles

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 5, 2024, 5:24 PM IST

Panchayat administration set up a water tanks for cattle's: கோடை வெயிலிலிருந்து ஆடு, மாடு, பறவைகளைப் பாதுகாக்கும் விதமாக, ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் தண்ணீர் தொட்டி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது பொது மக்கள் மத்தியில் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

தண்ணீர் அருந்தும் கால்நடைகளின் புகைப்படம்
தண்ணீர் அருந்தும் கால்நடைகளின் புகைப்படம் (Credits to Etvbharat Tamil Nadu)

தஞ்சாவூர்:தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் விளங்குகள், பறவைகள் மற்றும் கால்நடைகள் உணவு தேடியும் மேய்ச்சலுக்காகவும் வெளியே வரும் போது, நீரின்றி தவித்து வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு ஊராட்சி மன்ற நிர்வாக, தண்ணீர் தொட்டி அமைத்துக் கொடுத்து, அதில் தண்ணீர் நிரப்பும் செயல், அப்பகுதி மக்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

தண்ணீர் நிரப்பும் புகைப்படம் (Credits to Etvbharat Tamil Nadu)

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டு வருகிறது. மேலும் தற்போது வெயிலின் தாக்கமும் அதிகரித்து, பொதுமக்கள் நடமாட முடியாத அளவிற்கு உள்ளது. இந்நிலையில் இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலானோர், விவசாயிகளாகவும், கால்நடை வளர்ப்போராகவும் உள்ள நிலையில் வயல்வெளிகளில் மேய்ச்சலுக்கு வரும் ஆடு, மாடுகள் மற்றும் பறவைகள் குடிக்கத் தண்ணீர் இன்றி தவித்து வந்துள்ளன.

இதை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுந்தரி வெங்கடாஜலம், ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் மூலம் ஐந்து இடங்களில் தண்ணீர் தொட்டி அமைத்து, ஊரில் உள்ள தண்ணீர் டேங்கில் இருந்து தண்ணீரை டெம்போ வாகனங்கள் மூலம் எடுத்துச் சென்று நிரப்பி, கால்நடை மற்றும் பறவைகள் பயன்பெறும் வகையில் கால்நடைகளுக்கான தண்ணீர்ப் பந்தல் அமைத்துள்ளார்.

தண்ணீர் அருந்தும் கால்நடைகளின் புகைப்படம் (Credits to Etvbharat Tamil Nadu)

இவரின் இந்த செயலை இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், தேவைப்படும் நிலையில் இன்னும் கூடுதலாக பல்வேறு இடங்களில் கால்நடைகளுக்கான தண்ணீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுந்தரி வெங்கடாஜலம் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஆஹா கல்யாணம்.. மழை வேண்டி பஞ்ச கல்யாணிகளுக்கு கல்யாணம்! - Donkey Marriage For Rain

ABOUT THE AUTHOR

...view details