தமிழ்நாடு

tamil nadu

வெடிகுண்டு வீசி திமுக நிர்வாகி படுகொலை.. மர்மக் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 10:43 PM IST

DMK Executive: சென்னை வண்டலூர் அருகே திமுக நிர்வாகி ஆராமுதனை மர்மக் கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை
சென்னை

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் திமுக வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்து வருபவர் ஆராமுதன். இவர், வண்டலூர் மேம்பாலம் கீழ்ப்பகுதியில் கட்சி அலுவலகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், வண்டலூர் மேம்பாலம் அருகே புதிதாகப் பேருந்து நிலையம் கட்டப்பட்டுத் திறக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய பேருந்து நிலையத்தைப் பார்வையிடுவதற்காகத் தனது காரில் ஆராமுதன் வந்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென நாட்டு வெடிகுண்டுகளை காரின் மீது தூக்கி வீசி உள்ளனர். இதில், காரின் முன் பக்கம் கண்ணாடி முழுவதுமாக உடைந்தது.

இதனால், அதிர்ச்சி அடைந்த ஆராமுதன் காரில் இருந்து இறங்கி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது மர்ம நபர்கள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதையடுத்து, மர்மக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்க அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சென்ற ஓட்டேரி காவல்துறையினர் அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திமுக நிர்வாகியைப் படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடிய மர்மக் கும்பலை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நிறைவு! அரசுக்கு கடும் நெருக்கடி! நீதிமன்றத்தில் முறையீடு?

ABOUT THE AUTHOR

...view details