தமிழ்நாடு

tamil nadu

கிராமப்புற இளைஞர்கள் அதிகம் ராணுவத்தில் சேர என்ன செய்ய வேண்டும்: முன்னாள் குரூப் கேப்டன் வொக்ரா அறிவுரை! - rural students

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 25, 2024, 1:06 PM IST

Army training: கிராமப்புற மாணவர்களுக்கும் ராணுவ பயிற்சி அவசியம் அதை வழங்குவதே தங்களுடைய நோக்கம் என விமானப்படையின் முன்னாள் குரூப் கேப்டன் ஜி.எஸ்.வொக்ரா தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் இயக்குநராக விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்ற குரூப் கேப்டன் ஜி.எஸ்.வொக்ரா பொறுப்பேற்றுக் கொண்டார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் ஜி.எஸ்.வொக்ரா கூறுகையில்,

"பள்ளிகளின் தரத்தை பன்மடங்கு உயரத்திற்கு கொண்டு செல்ல கடமைப்பட்டிருப்பதாகவும் ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் உள்ள மத்திய அரசு மற்றும் இராணுவத்தின் கீழ் உள்ள பள்ளிகளின் ஆலோசகராகவும், கனடா மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கல்வி தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஊத்துக்குளி பகுதியில் உள்ள இந்த பள்ளியை தேர்ந்தெடுத்து பொறுப்பேற்றுக் கொண்டதற்கான காரணம், நகரப் பகுதிகளில் மாணவர்களுக்கு பல்வேறு விவரங்களை தெரிவிக்க வழிகாட்டிகள் இருக்கின்றனர். ஆனால் ஊரக மற்றும் கிராமப் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு தேவையான அறிவையும் ஆற்றலையும் வழங்குவதற்காக இப்பள்ளியை தேர்ந்தெடுத்து பணியாற்ற உள்ளேன் என்றார்.

தொடர்ந்து பள்ளியின் கல்வித்தரத்தை உயர்த்துவது தனது முதல் பணி எனவும் அதற்கேற்ற வகையில் விரிவான வகுப்பறை ஆய்வுக்கூடம் கணினி கூடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதோடு மாணவர்களின் எதிர்காலத்துக்கு தேவைப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தை கற்றுத் தர இருப்பதாகவும் தெரிவித்தார்.

கல்வி மட்டுமல்லாது ஒழுக்கமும் சமூகத்தில் நற்பெயரை ஏற்படுத்தக் கூடும் என்பதை மாணவர்கள் மத்தியில் ஆழமாக போதிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் ராணுவத்தில் சேர்வது குறித்த ஆர்வத்தை அவர்களுக்கு ஏற்படுத்தப் போவதாகவும்,

அதற்காக அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களால் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். இதற்காக மாணவர்கள் இடத்தில் எந்தவிதமான கடனங்களும் வசூலிக்க போவதில்லை என்றும் இது முற்றிலும் இலவசமாக கற்றுத்தரப்படும் என்று தெரிவித்தார்.

கல்வி ஒழுக்கம் ஆகியவற்றை முறைப்படுத்தி சமூகத்தில் பொறுப்புள்ள குடிமகனாக மாணவர்களை உருவாக்குவதில் முன்னெடுப்போடு பணியாற்ற இருப்பதாகவும் உலகத் தரத்தில் பள்ளியை உயர்த்தி மாணவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வரும் இருப்பதாகவும்" தெரிவித்தார்.

இதையும் படிங்க:உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த இளைஞர் மரணம்.. புகாரில் கூறப்பட்டுள்ளது என்ன?

ABOUT THE AUTHOR

...view details