தமிழ்நாடு

tamil nadu

தேர்தலில் வன்முறைக்கு திட்டமா? - பயங்கர ஆயுதங்களுடன் கைதான ரவுடிகள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 6:35 PM IST

சென்னை திருமங்கலம் தனியார் உணவகத்தில் பயங்கர ஆயுதங்களுடன் இருந்த 20 ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை
Chennai

சென்னை: சென்னை திருமங்கலம் அருகே தனியார் உணவகம் ஒன்றில் 10க்கும் மேற்பட்ட ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் கூடியிருப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு உணவு அறிந்து கொண்டு இருந்த 20 ரவுடிகளை சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களின் இருந்த துப்பாக்கிகள், பட்ட கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், 20 ரவுடிகள் கைதானது குறித்து சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் இன்று (மார்ச் 15) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "திருமங்கலம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பயங்கர ஆயுதங்களுடன் உணவு அருந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து 20 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 துப்பாக்கிகள், 82 தோட்டாக்கள்,11 பயங்கர ஆயுதங்கள் மற்றும் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்கள் மேல் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சிறையில் இருந்த வெளியே வந்த ஜெயபால்(63), முத்துக்குமார்(30), சொக்கலிங்கம்(24) உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு நாட்டுத் துப்பாக்கிகளை சப்ளை செய்த சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த தம்பி ராஜா(54) என்பவரையும் கைது செய்யதுள்ளோம். இவரை இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இவருக்கு எங்கிருந்து துப்பாக்கிகள் கிடைத்தது என்பது போன்ற விசாரணைகளும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தற்போது தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருவதால் சில தகவல்களை பொதுவெளியில் கூற முடியாது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "சென்னை பெருநகரத்தில் ரவுடிசம் நடப்பது குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக கடும் நடவடிக்கைகள் எடுத்து ரவுடிகள் ஒழிக்கப்படுவார்கள். தேர்தலையொட்டி ரவுடிகள் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரவுடிகளின் பட்டியலும் தயார் செய்து அவர்களை கண்காணிக்கும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. மேலும், இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மர்ம நபர் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:"திமுகவின் கர்வம் அகற்றப்பட வேண்டும்" - குமரி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஆவேச பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details