தமிழ்நாடு

tamil nadu

இன்றைய ராசிபலன் : உங்களது துணையை கண்டறியும் நாள்.. எல்லாம் இனி அதிர்ஷ்டம் தான்! - Today Rasipalan in Tamil

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 22, 2024, 6:55 AM IST

Today Rasipalan in Tamil: 2024 ஏப்ரல் 22ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

Today Rasipalan in Tamil
இன்றைய ராசிபலன்

மேஷம்:காரணம் ஏதும் இல்லாமல் நீங்கள் இன்று தனிமையில் இருக்க விரும்புவீர்கள். மற்றவர்கள் அளித்த பங்களிப்பை நீங்கள் அங்கீகரிக்கும் வேளையில், அதை விட நீங்கள் அவர்களுக்கு அதிகம் செய்யும் நிலைமை இருக்கும். பணியில் உங்கள் மூத்தவர்களுடன் உங்கள் அறிவுத்திறனைப் பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தும் தேவையும் உள்ளது.

ரிஷபம்:இன்று, உங்களுக்குக் கற்பனைத் திறன் அதிகம் இருக்கும். புதிய விஷயங்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள். உங்களது படைப்பாற்றல் காரணமாக உங்கள் பணியிடத்தில் உறுதிப்பாட்டுடன் பணியாற்றுவீர்கள். உங்களது புகழ் காரணமாக, எதிர்பாராத வகையிலான பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்:உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் உற்சாகமும், மகிழ்ச்சியும் நிலவும். உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் அதிக நேரம் செலவழிப்பீர்கள். வீட்டை அலங்கரிக்கும் முயற்சியை மேற்கொள்வீர்கள். குடும்பத்தினருடன் மேற்கொள்ளும் நீண்ட ஆலோசனைகள் காரணமாகத் தீர்வு காணப்பாடாமல் உள்ள விஷயங்கள் சுமுகமாகத் தீர்க்கப்படும்.

கடகம்:உங்கள் காதல் துணையுடன், கடைகளுக்குச் சென்று அவர்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்குவதில் அதிகப் பணம் செலவு செய்வீர்கள். நீங்கள் அவர்களுக்காக அதிகப் பணம் செலவு செய்து அவர்கள் மனதை மகிழ்விக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்து கொண்டுள்ளீர்கள். பதிலுக்கு அவர்களும் உங்களது மனதை மகிழ்விக்கும் வகையில் பரிசுகளைத் தருவார்கள்.

சிம்மம்:இன்றைய தினத்தைப் பொருத்தவரை நீங்கள் எதிர்பார்த்த வகையில் நடக்கும் சாத்தியம் மிகவும் குறைவு. அதனால் அது குறித்துக் கவலைப்படாமல், நடப்பவை நல்லதற்கு என்ற எண்ணத்துடன் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டும். உங்களுக்கு ஏற்ற சரியான நபரை நீங்கள் சந்தித்து, அதன் மூலம் உங்களது கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புள்ளது.

கன்னி:சூழ்நிலைக்கு ஏற்றபடி நடந்து கொள்ளும் உங்களது தன்மையின் மூலம், உங்களைச் சுற்றியிருக்கும் மக்களை மகிழ வைப்பீர்கள். காதல் வயப்பட்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத சம்பவம் நேரிடலாம். கவலை கொள்ளத் தேவையில்லை. அவை உங்களுக்குச் சாதகமான விஷயமாகவே இருக்கும். குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடவும். குடும்பப் பொறுப்பை எடுத்துக் கொண்டு உங்களது கலாச்சாரத்தை மதிப்பதன் மூலம் குடும்ப உறவு பலப்படும்.

துலாம்:இன்று உங்களுக்குச் சாதகமான நாளல்ல. அது குறித்து நீங்கள் மனம் வருத்தம் அடைய வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. நல்லது நடக்கவில்லை என்றால் அது கெடுதல் என்று பொருள் இல்லை. சிறிது மன அழுத்தங்கள் இருந்தாலும், மாலையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது உறுதி. மேலும் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வீர்கள்.

விருச்சிகம்:வாழ்க்கை என்பது ஒரு சிறந்த ஆசிரியர் ஆகும். அதை நீங்கள் இன்று அனுபவித்து அறிவீர்கள். கடும் போட்டியின் மத்தியில் சந்தையில் வெற்றி பெறுவது எப்படி என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். இதனால் எதிர்ப்புகள் வந்தாலும், அது உங்களைப் பாதிக்காது. தவறு செய்வது மனித இயல்பு, அதை மன்னிப்பது கடவுள் இயல்பு என்பதை நினைவில் கொள்ளவும். அதனால் நீங்கள் தவறு செய்தாலும் அது குறித்து கவலை கொள்ள வேண்டாம்.

தனுசு:இன்று வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதில் நேரம் அதிகம் செலவாகும். உங்களது பொறுமையான குணத்தினால் மற்றவர்கள் கூறும் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் கவனமாகக் கேட்பீர்கள். இன்று, உங்களுக்கு ஒரு ஆக்கப்பூர்வமான, சாதகமான நாளாக இருக்கும்.

மகரம்:உங்களுக்குப் பொருத்தமான துணையை நீங்கள் கண்டறிந்து, அவர்களிடம் உங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். உங்களைப் பொறுத்தவரை உங்கள் குடும்பம் தான் உங்களது உலகம் ஆகும். கடந்த வருடங்களில் இல்லாத அளவிற்கு உங்கள் உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் வெளிப்படுத்தும் நிபந்தனையற்ற அன்பு பல மடங்கு உங்களை வந்து சேரும்.

கும்பம்:இன்றைய தினத்தை உங்களுக்காகச் செலவிட விரும்புவீர்கள். எனினும் இது தேவையான அமைதியையும், நிம்மதியையும் கொடுக்காது. விருப்பமில்லாத நிகழ்வுகளின் காரணமாக மன வருத்தம் ஏற்படும். நீங்கள் வணங்கும் கடவுளின் மூலம் தான் உங்களுக்குத் தேவையான மனோ சக்தி கிடைக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

மீனம்:இன்றைய தினத்தைப் பொருத்தவரை, நீங்கள் விரும்பிய அனைத்தையும் செய்யலாம். உங்களது குழுவிற்கு உங்கள் அனுபவத்தின் மூலம் செயல்திறனை நிரூபிக்க இயலும். உங்களை அனைவரும் போற்றுவார்கள். பெண்களுக்கு லாபம் கிடைத்து அதன் மூலம் ஊக்கம் பெறுவார்கள்.

இதையும் படிங்க:"தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கே பாதுகாப்பற்ற நிலை" - போதைப்பொருள் புழகத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்! - EDAPPADI PALANISWAMI

ABOUT THE AUTHOR

...view details