தமிழ்நாடு

tamil nadu

கர்நாடக எம்பி ஆபாச வீடியோ வழக்கு: ஜாமீன் கோரி எச்.டி.ரேவண்ணா மீண்டும் மனுத் தாக்கல்! - Karnataka MP Prajwal Revanna Case

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 6, 2024, 3:58 PM IST

ஆபாச வீடியோ வெளியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஹோலேநரசிப்பூர் எம்எல்ஏ எச்.டி.ரேவண்ணா ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் ஜாமீன் கோரி எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான மனுக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் எச்.டி.ரேவண்ணா மனுத் தாக்கல் செய்துள்ளார். அதேநேரம் ரேவண்ணாவின் மனுவை எதிர்த்து சிறப்பு புலனாய்வுக் குழு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு புலனாய்வு குழுவின் காவலில் இருக்கும் எச்.டி ரேவண்ணாவின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் நிராகரிக்கும் பட்சத்தில் உயர் நீதிமன்றத்தை அணுக ரேவண்ணா தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஆபாச வீடியோ விவகாரத்தில் எச்.டி ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், நேற்று (மே.5) சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 4 நாட்கள் காவலில் எடுத்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, ஆபாச வீடியோ விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்புடைய வீடியோக்களை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பகிர வேண்டாம் என்றும் அதையும் மீறி வேண்டுமென்றே பகிரும் நபர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆபாச வீடியோ விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த எண்கள் மூலம் தொடர்பு கொண்டு சட்ட உதவிகள் பெறுபவர்கள் அடையாளங்கள் மற்றும் தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் ஹசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தள எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவின் தொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியாகி நாட்டை ஒரு உலுக்கு உலுக்கியது. தன்னிடம் உதவி எனக் கோரிய நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி அதை வீடியோவாக பதிவு செய்து மிரட்டியதாக பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்து மாநில அரசு நியமித்த சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கோரி ஹசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தையும் ஹோலேநரசிப்பூர் தொகுதி எம்எல்ஏ எச்.டி ரேவண்ணா ஆகியோருக்கு சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ் வழங்கியது. இதனிடையே, பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்றதாக தக்வல் பரவியது.

ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்டில் பிரஜ்வல் ரேவண்ணா இருப்பதாகவும் அவரது நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறும் சிபிஐக்கு மாநில சிறப்பு புலனாய்வு குழு ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கியது. இதைத் தொடர்ந்து அபாச வீடியோ வழக்கில் கைது நடவடிக்கைக்கு எதிராக முன்ஜாமீன் கோரி எச்.டி ரேவண்ணா தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: தெலங்கானா எம்எல்சி கவிதா ஜாமீன் மனு தள்ளுபடி! - Delhi Excise Policy Case

ABOUT THE AUTHOR

...view details