தமிழ்நாடு

tamil nadu

முறைகேடு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சம்மன்! நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 12:35 PM IST

Arvind Kejriwal: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 16ஆம் தேதிக்கு முன்னதாக ஆஜராக கோரி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Arvind Kejriwal
Arvind Kejriwal

டெல்லி :மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகாமல் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து தவிர்த்து வருவதாக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புதிய மனு தாக்கல் செய்து உள்ளது. மனுவை விசாரித்த கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் திவ்யா மல்ஹோத்ரா, மார்ச் 16ஆம் தேதிக்கு முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.

டெல்லியில் மதுபான கொள்கை வகுத்ததில் அரசுக்க் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா அளித்த புகாரில் சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதாக கூறி அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

வழக்கு தொடர்பாக டெல்லி அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் மற்றும் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு அஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகிறது.

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து அமலாக்கத்துறையின் சம்மன்களை புறக்கணித்து வருகிறார். இதனிடையே டெல்லி நீதிமன்றத்தை அணுகிய அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடுமாறு கோரியது. இதையடுத்து மார்ச் 16ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், பண மோசடி விவகாரத்தில் அமலாக்கத்துறை மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில், மார்ச் 16ஆம் தேதிக்கு முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகுமாறு கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் திவ்யா மல்ஹோத்ரா உத்தரவிட்டு உள்ளார்.

இதையுஇம் படிங்க :தேர்தல் பத்திர விவகாரம்: எஸ்பிஐ வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்!

ABOUT THE AUTHOR

...view details