'அதிமுகவுக்கு தெம்பு இருந்தால் சட்டப்பேரவையை முடக்கட்டும்' - உதயநிதி சவால்

By

Published : Feb 16, 2022, 6:55 AM IST

Updated : Feb 3, 2023, 8:16 PM IST

thumbnail

திண்டுக்கல் மாநகராட்சியின் 48 வார்டுகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களின் தேர்தல் பரப்புரை கூட்டம், மணிக்கூண்டு அருகே நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது, "எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2 நாள்களாக சட்டப்பேரவையை முடக்கப் போவதாகக் கூறுகிறார். சட்டப்பேரவையை முடக்கினால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும். நான் அவருக்கு சவால் விடுகிறேன். அதிமுகவுக்கு தெம்பு இருந்தால் சட்டப்பேரவையை முடக்கிப் பார்க்கட்டும். அதன்பின்னர் தேர்தல் நடைபெற்றால் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும். அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது" என்றார்.

Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST

TAGGED:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.