அரசின் அலட்சியப்போக்கால் தான் விபத்து நடந்துள்ளது - முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை
திருநெல்வேலி: கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தை நேரில் சென்று ஆய்வு செய்த அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அரசின் அலட்சியப்போக்கால் தான் இந்த விபத்து நடந்துள்ளது. கண் முன்னே ஒருவர் உயிருக்கு போராடும் போது முதலமைச்சர், அமைச்சர்கள் மீட்புப் பணிகளை பார்வையிட ஏன் நேரில் வரவில்லை. மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. ஆனால், இதிலும் ஆளுநரை குறை சொல்லப் போகிறார்களோ என்னவோ தெரியவில்லை. தவறை சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிக்கு உள்ளது” என்றார்.