காதலியின் திருமண விழாவில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்
ஹைதராபாத்தை சேர்ந்த ஷேக் அஷ்வாக் (19) என்ற வாலிபர், தனது காதலிக்கு திருமணம் நடந்த திருமண மண்டபத்திற்கு சென்று, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அஷ்வக் இன்று காலை உயிரிழந்தார்.