நா ஊறும் நாட்டு வாழைப்பழ அல்வா - தூத்துக்குடியின் ஸ்பெஷல்!
இன்றைய அளவில் இயற்கை வேளாண் விளை பொருட்களால் சுகாதாரமான முறையில் செய்யப்படும் உணவுகளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. அதேபோல் தின்பண்டங்களிலும் மரவள்ளிக் கிழங்கு, பழங்கள், கேழ்வரகு போன்ற விவசாய விளை பொருட்களால் செய்யும் நொறுக்குத் தீனிகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கூடியிருக்கிறது. அந்த வகையில், இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு புதுவிதமான இனிப்பு வகையாக தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் நாட்டு வாழைப்பழ அல்வா தயாரிப்பது பற்றி இப்போது பார்க்கலாம்.