புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை - பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!
கன்னியாகுமரி: புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். காலை முதலே குவிய தொடங்கிய பக்தர்களை அந்தந்த கோயில் நிர்வாகம் முகக்கவசம், தகுந்த இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தியது.