ஆவடியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்துப் பேசிய பால்வளத் துறை அமைச்சர் நாசர், ஒமைக்ரான் பரவலைத் தடுப்பதற்காகத் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்துவருகிறது என்றார். செய்தியாளரின் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த நாசர், 'மோடி வருவதை வரவேற்கிறோம், அவர் நல்ல காரியத்திற்காக வருகிறார்; எனவே வரவேற்கிறோம்' என்றார்.
TAGGED: