இசை அழைக்கையில் பாடல் வராமல் போகுமா...! சீக்கிரம் வாருங்கள் எஸ்பிபி......
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். எஸ்பிபி நலம்பெற பலரும் கடவுளிடம் இறைஞ்சுகின்றனர். அதை காணொலி மூலமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவர்களில் திரை பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். இளையராஜா வெளியிட்ட வீடியோவில் 'சீக்கிரம் வா பாலு' என்று அழைக்கையில் அன்பின் முதிர்ச்சியை வெளிப்படுத்தியிருப்பார். இசை அழைக்கையில் பாடல் வராமல் போகுமா! சீக்கிரம் வாருங்கள் எஸ்பிபி......
TAGGED: