படுகர் இன மக்களுடன் நடனமாடிய ராகுல்காந்தி!
'வாங்க, ஒரு கை பாப்போம்' என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழ்நாட்டில் 3 நாள்கள் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில், கோவை கருமத்தம்பட்டி பகுதியில் படுகர் இன மக்கள் தங்களது பராம்பாரிய உடையணிந்து, நடனமாடி வரவேற்பு அளித்தனர். அப்போது, ராகுல்காந்தி காரிலிருந்து இறங்கி வந்து படுகர் மக்கள் அளித்த அவர்களது பராம்பரிய உடையை அணிந்தபடி, அவர்களுடன் சிறிது நேரம் நடனமாடினர்.