திம்பம் மலைப்பகுதியில் தோன்றிய புதிய அருவிகள்!
ஈரோடு: சத்தியமங்கலத்தில் கடல்மட்டத்திலிருந்து 1140 மீட்டர் உயரத்தில் திம்பம் மலைப்பகுதி அமைந்துள்ளது. திம்பம் மலைப்பகுதியில் சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், அப்பகுதிகளில் புதிய அருவிகள் தோன்றியுள்ளன. திம்பம் மலை உச்சியில் சாலையோரத்தில் பாறைகளை தழுவியபடி புதிய அருவிகளில் கொட்டும் மழைநீரை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதோடு, செல்பியும் எடுத்துக் கொள்கிறார்கள்.