கிறிஸ்துமஸ் பண்டிகை: மாஸ்க் அணிந்து போஸ் கொடுக்கும் சான்டாகிளாஸ்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை வரவேற்கும்விதமாகவும், கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாகவும் முகக்கவசம் அணிந்தவாறு உள்ள பொம்மைகள் கொண்டு அலங்காரம்செய்யப்பட்ட 25 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டுள்ளது. அந்த மரத்தில், சான்டாகிளாஸ் உருவபொம்மை அமைத்து, அதில் சான்டா கிளாஸ் முகக்கவசம் அணிந்து தனது வாகனத்தில் பயணிப்பது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது.