"கண்டம் விட்டு கண்டம் தாண்டி பரவும் கரோனா வைரஸ் தாக்குதல்" - வாளையாரில் விழிப்புணர்வு
கரோனா வைரஸ் கடந்த சில வாரங்களாகவே மருத்துவத்துறையை படுவேகமாக செயல்பட வைத்திருக்கிறது. தொடக்கத்தில் சீனாவில் பரவிய இந்த வைரஸ் தாக்குதல், தற்போது கண்டம் விட்டு கண்டம் தாண்டி உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் கேரளாவில் கரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதியான வாளையாரில் கரோனா வைரஸ் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
Last Updated : Mar 17, 2020, 5:42 PM IST