ஆசனூர் சாலையில் காரை துரத்திய யானை - காணொலி

By

Published : Dec 15, 2020, 10:50 AM IST

thumbnail

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. தீவனம் மற்றும் குடிநீர் தேடி யானைகள் மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம். தமிழ்நாடு-கர்நாடகாவை இணைக்கும் முக்கியச் சாலை என்பதால் ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்நிலையில் காராப்பள்ளம் என்ற இடத்தில் சாலையோரம் முகாமிட்டிருந்த ஒற்றை ஆண்யானையை பார்த்து காரில் சென்ற இளைஞர்கள் நிறுத்தினர். நீண்ட நேரமாக நின்றுகொண்டிருந்த இளைஞர்கள் காரை இயக்கியபோது சாலையோரம் நின்றிருந்த ஒற்றையானை காரை துரத்தியது. அதனால் காரை பின்னோக்கி ஓட்டிச் சென்றனர். இதையடுத்து மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த வனத் துறையினர் பட்டாசு வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டினர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.