மின்சாரம் தாக்கி உயிரிழந்த காட்டு யானைகளுக்கு 21ஆவது நாள் காரியம் செய்த ஊர்மக்கள்

By

Published : Mar 26, 2023, 10:43 PM IST

thumbnail

தருமபுரி: மாரண்டஅள்ளி அருகே காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மூன்று காட்டு யானைகளுக்கு ஊர் மக்கள் ஒன்று கூடி 21ஆவது நாள் காரியம் செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தில் 20 நாட்களுக்கு முன்பு முருகேசன் என்பவரின் விவசாய நிலத்துக்கு உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த ஒரு பெண் யானை, 2 ஆண் யானை என்று மூன்று காட்டு யானைகள் வந்தன.

அப்போது, எதிர்பாராதவிதமாக விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே மூன்று காட்டு யானைகளும் உயிரிழந்தன. இந்த விபத்து கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

இதையடுத்து கிராம மக்கள் ஒன்றிணைந்து வனத்துறையினரின் தலைமையில் யானைகளை அடக்கம் செய்தனர். அதைத்தொடர்ந்து இன்று (மார்ச் 26) 21 ஆவது நாள் காரியம் நடைபெற்றது. 

யானைகள் புதைக்கப்பட்ட குழியின் மீது பூக்களால் அலங்கரித்து, யானைகளுக்கு விருப்பமான உணவுகளான வாழைப்பழம், கரும்பு, தேங்காய், திராட்சை பழம், ஆரஞ்சு பழம், மாம்பழம் , அன்னாசிபழம், பலாப்பழம் உள்ளிட்டவைகளை வைத்து படையலிட்டு பூஜை செய்து வழிபாடு நடத்தினர் அந்த கிராம மக்கள். இது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

இதையும் படிங்க: சாப்பிடலாமா? என கேட்டதற்கு தலை அசைத்து பதில் சொன்ன கோயில் யானை

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.