Flood in kumbakarai falls: கும்பக்கரை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு.. 5வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 1:26 PM IST

thumbnail

தேனி: பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியில் நீரின் அளவு அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று (அக். 15) மாலை முதல் நள்ளிரவு வரை 5 மணி நேரத்திற்கும் மேலாக விட்டு விட்டு கனமழை பெய்ததால் மேலும் நீரின் அளவு அதிகரித்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கும்பக்கரை அருவியில் நீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. எனவே சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் 4 தினங்களுக்கு முன்பாக கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை விதித்தனர். இந்த நிலையில் தற்போதும் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறையாததால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 5வது நாளாகத் தொடர்வதாக தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கும்பக்கரை அருவியில் உற்சாக குளியல் போட வந்த சுற்றுலா பயணிகள் வனத்துறையின் அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்தனர். 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.