கள்ளவாண்ட கோயில் திருவிழா: கொதிக்கும் சோற்றை தலையில் அடித்து சாமியாடிகள் பரவசம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 5:21 PM IST

thumbnail

தூத்துக்குடி:  ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் கள்ளவாண்ட சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில்களில் மட்டும் திருவிழா நாட்களில் இரவு நேரத்தில் கொதிக்கும் பானையில் இருந்து சோற்றை அள்ளி தலையில் அடித்து ஆடும் நிகழ்ச்சி நடைபெறும்.

அதே போல், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிளாக்குளம் கிராமத்தில் நேற்று இரவு (ஆகஸ்ட் 22) கள்ளாண்ட சுவாமி கோயில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு காலை கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு ஊரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம் முழங்க வருகை தந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்று சாமியாடிகள் வேட்டைக்குச் சென்றனர். 

இரவு 1 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான வேட்டை பானை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் 17 பிரமாண்ட பானையில் பனை ஓலைகளைக் கொண்டு நெருப்பு மூட்டி, கஞ்சி காய்ச்சினார்கள். கஞ்சி காய்ச்சும் நேரத்திலேயே நையாண்டி மேளம், உருமி மேளம் மற்றும் வில்லிசைப் பாடலாக, கள்ளவாண்ட சுவாமி கதை பாடப்பட்டது. 

அந்தக் கதையைக் கேட்டு அருள் முற்றும் சாமியாடிகள், 17 பானைக்கு அருகில் சென்று தென்னம்பானையை பானைக்குள் விட்டு சுடு கஞ்சியை எடுத்துத் தன் தலையில் ஊற்றிக் கொண்டபடி அருளோடு ஆடினார்கள். குழந்தை வரம், தொழில் என அனைத்தும் நிறைவேறும் என நம்பக்கை இருப்பதால் பொதுமக்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதலை இறைவனிடம் பெறுவார்கள். இதனை பக்தர்கள் ஆச்சிரியத்துடன் பார்த்து வந்ததனர்

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.