முழங்கால் அளவு நீரில் இறந்தவரின் உடலை சுமந்து செல்லும் அவலம். நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 1:02 PM IST

thumbnail

வேலூர்: காட்பாடி அடுத்த கிளித்தான்பட்டறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு என கிளித்தான் பட்டறை சாலை அருகே இருந்த சுடுகாடு அழிக்கப்பட்டு அந்த இடத்தில் காட்பாடி தாலுகா அலுவலகம் மற்றும் நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், இறந்தவர்களின் உடலை புதைப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் தாராபடவேடு ஏரி அருகே சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்கப்பட்டது. இது குறித்து ஊர்மக்கள் கூறுகையில், ‘சுடுகாட்டிற்குச் செல்ல வேண்டுமென்றால் ரயில்வே சுரங்கப்பாதையை கடந்து செல்ல வேண்டி உள்ளது. அதுமட்டுமின்றி சுரங்கப்பாதை எப்பொழுதுமே தண்ணீர் நிரம்பிய நிலையில் இருப்பதால் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்லும்போது முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி எடுத்துச் செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், சுரங்கப்பாதையில் உள்ள தண்ணீரை உடனடியாக அகற்றி சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.