மருதமலையில் நடைபெற்ற சூரசம்ஹாரம்..!
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சூரசம்ஹாரத்தின் போது அரோகரா அரோகரா என கோஷம் எழுப்பினர். விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகம் மற்றும் கோவை - வடவள்ளி பகுதி போலீசார் செய்து இருந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST