கான்கிரீட் கால்வாய் திட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய கீழ்பவானி பாசன விவசாயிகள்!

By

Published : Aug 8, 2023, 7:00 PM IST

thumbnail

ஈரோடு: பவானி சாகர் கீழ்பவானி கால்வாயில் 720 கோடி ரூபாய் மதிப்பில் கான்கிரீட் திட்டம் அமைக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த விவசாயிகளின் பல்வேறு கட்டப்போராட்டத்திற்குப் பிறகு பணிகள் தொடங்கப்பட்ட இடத்தில் மட்டும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்றும் கூறப்பட்டது. 

ஆனாலும் பணிகள் தொடங்கப்பட்ட 11 இடங்களுக்கும் மேலாக பொதுப்பணித்துறை மற்றும் கட்டுமான நிறுவனம் கால்வாயின் கறைகளைச் சேதப்படுத்தி பணிகளைச் செய்து வருகின்றனர். இந்நிலையில் பணிகளை விரைந்து முடித்து அமைச்சர் முத்துசாமி மற்றும் அதிகாரிகள் கூறியபடி ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட வேண்டும். மேலும் கான்கிரீட் கால்வாய் திட்டம் தொடர்பான அரசாணை எண் 276ஐ ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கீழ்பவானி பாசன கால்வாய் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக, கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணை 276-யை ரத்து செய்ய வேண்டும் என்றும்; தமிழக அரசு அளித்த வாக்குறுதியின் படி ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறப்புக்கான ஆணையை வெளியிட வேண்டுமென முழக்கம் எழுப்பியபடி மஞ்சள், வாழை, கரும்பை உள்ளிட்டவற்றைக் கையில் வைத்துக் கொண்டு அரச்சலூர் வாய்க்காலில் இறங்கி 200க்கும் மேற்பட்ட கீழ்பவானி பாசன விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.