குற்றாலம் மெயின் அருவில் வெள்ளப் பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 9:08 AM IST

thumbnail

தென்காசி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. இதனால் தமிழகத்தில் அவ்வப்போது லேசான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனிடையில், தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. முன்னதாக, குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பின் தண்ணீர் வரத்து சீரானதும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். 

இந்நிலையில் நேற்று (அக்.30) மாலையில் இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாய வளைவைத் தாண்டி தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் குற்றாலத்தில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் ஆர்ப்பரித்து கொடும் தண்ணீரை அழகை கண்டு ரசித்தும், புகைப்படத்தும் எடுத்தும் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.